புதன், 7 நவம்பர், 2012

குறுந்தொகை-3


இயற்றியவர் – தேவகுலத்தார்
குறிஞ்சித்திணை
தலைவி கூற்று
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே – சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

கருத்துரை

கரிய கொம்புகளில் குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கும் நாடு என் தலைவனின் நாடு. அப்பூக்களில் உண்ட தேனினை, வண்டுகள் தொகுத்துத் தேனடையாகக் கொடுக்கிறது. இத்தனை வளம் நிறைந்த குறிஞ்சித் தலைவனோடு நான் கொண்ட நட்பு, நிலத்தை விடப் பெரியது. வானை விட உயர்ந்தது. நீரினை விட ஆழமானது


 இயற்கையின் இனிது எம் நட்பு காதலை உயர்த்திச் சொல்லும் காதலியின் சொல்வன்மை நமக்கே இனித்ததென்றால் காதலனுக்கு…?

அருஞ்சொற்பொருள்.
 நிலத்தினும் பெரிதே - நிலத்தைவிடப் பெரியது. வானினும் உயர்ந்தன்று-வானைவிட உயர்ந்தது. நீரினும் ஆரளவின்றே – நீரைவிட ஆழமானது. சாரல்- மலைப்பக்கம்,கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு- கரிய கொம்புகளில்  உள்ள குறிஞ்சிமலர்களைக் கொண்டு,  பெருந்தேன் இழைக்கும் - பெரிய தேனடையைத் தொகுக்கின்ற, நாடனொடு நட்பே- நாட்டை.யுடைய தலைவனோடு கொண்ட நட்பு

1 கருத்து: